செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

இராமாயணக்காதை.


சந்தன வாடை

சுமந்து வரும்

இளந்தென்றல்

நந்தவனப் பூவிதழில்

நர்த்தனமாடி வர

 

கானக் கருங்குயில்

குரலெழுப்பி

கானம் இசைக்கக்

கேட்டு மானினம்

ஓடி மகிழ்ந்தாட

 

திங்கள் முகம் கொண்ட

தங்கச் சிலையழகி

சீதையவள்

புள்ளிமான் வேண்டி

இராமனிடம் கேட்டிட

 

மானைத் தேடி-இராமன்

கற்குகை புகுந்ததால்

வெளியில் வந்தது

அகிலம் போற்றும்

இராமாயணக் காதை.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக