சந்தன வாடை
சுமந்து வரும்
இளந்தென்றல்
நந்தவனப் பூவிதழில்
நர்த்தனமாடி வர
கானக் கருங்குயில்
குரலெழுப்பி
கானம் இசைக்கக்
கேட்டு மானினம்
ஓடி மகிழ்ந்தாட
திங்கள் முகம் கொண்ட
தங்கச் சிலையழகி
சீதையவள்
புள்ளிமான் வேண்டி
இராமனிடம் கேட்டிட
மானைத் தேடி-இராமன்
கற்குகை புகுந்ததால்
வெளியில் வந்தது
அகிலம் போற்றும்
இராமாயணக் காதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக