மேகம் மறைத்து நின்று
மேகாத்த வீசவைத்து
ஆழ்கடலை ஏவிவிட்டு
அழித்த உயிரத்தனையும்
பூமியின் மடிமீது
விழிமூடி கிடக்குதம்மா!
இறந்த உறவெல்லாம்
சிதைந்து கிடப்பதனால்
ஈமச்சடெங்கேதும் செய்யாது
தனிமைச் சிறையில் வாடி
அழுது ஏங்குமந்த உயிர்-உணவுக்கும்
கையேந்தி நிக்குதம்மா!
வெட்டவெளி சாலையில
வீசிவந்த பெருங்காத்து
வீதியில நின்ற மரம்
விதிமுடிந்து போனதுபோல்
வேரோடு சாய்த்து-ஊரின்
உறவையும் பிரித்ததம்மா!
ஊர்மக்களைக் கொன்று
வழி நெடுக வீசியெறிந்த-அந்தக்
கொலைகாரப் பாவிபுயல்
இரங்கலுக்கு வந்ததுபோல்
இளந்தென்றலை தூதனுப்பி
பரிகாரம் தேடுதம்மா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக