திங்கள், 18 நவம்பர், 2013

வறுமையின் கொடுமை.


ிழித்திருப்பதுபோல்

பகல் பொழுது

உறங்கிக்கிடப்பதுபோல்

ஊரின் நிலப்பரப்பு

 

உணவுக்கு தவிப்பதுபோல்

ஒரு பிஞ்சு

ுடிவுக்குக் காத்திருப்பதுபோல்

ஒரு பருந்து

 

ோத்துக்கு ஏங்குதோ

இந்த உயிர்?

ோகத்தைத் தாங்காது

ேதனையில் சரியுதோ?

 

பசி தீர, மண்ணைதொட்டு

வணங்குதோ?-இல்லை

மண்ணோடு உறவாட

வரம் வேண்டுதோ?

 

நாத்துபோல நிமிர்ந்து

நிற்கும் வயசில

நாதியத்துக் கிடக்குதம்மா

உதவி ஏதுமில்லாம.

 

கோடை வெய்யில்போல்

கொதிக்குதம்மா என் நெஞ்சம்

வடியாத வெள்ளம்போல்

விழியெல்லாம் நீரம்மா.

 

உன்னை மறப்பதற்கு

என்னால முடியாது-நான்

செத்து மடிந்தாத்தான்

மறப்பதற்கு மாத்து வழி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக