வியாழன், 14 நவம்பர், 2013

முதல் தெய்வம்


அம்மா

உன் அன்பின் உயரத்தை

இமயம்கூட எட்டாது

கடலின் ஆழம் கூட

கணக்கிடப்படும்

உன் பாச அளவு

ார் கூறமுடியும்?

 

என் உடல்

ாடக்கண்டால்

உன் விழியில்

வழியும் கண்ணீர்

காட்டிவிடும்

உன் நெஞ்சின்

துயரம்

 

தத்தி நடந்து

தவறி விழும்போது

பதறித் துடித்துத்

தாவியணைக்கும்

அன்புள்ளம்

யாருக்குண்டு

உனையன்றி?

 

நான்

விழித்தபோதெல்லாம்

உன் அரவணைப்பை

நாடும் என் உயிர்

நீயோ

உறங்கும்போது கூட

உன் உயிர்

என் அரவணைப்பை

உறுதிசெய்யும்

என் மேலிருக்கும்

உன் கை

 

உயிர்களை

படைத்தவன் இறைவனென

நீ கற்பித்தாலும்

என்னை படைக்க

ஈசன் எதை இழந்தான்?

அன்னையே!

என்னை படைத்து

காத்து வளர்த்திட

எதை நீ

இழக்கவில்லை

சொல்லு தாயே?

 

தாயே!

எனை படைத்தாய்

ஊட்டி வளர்த்தாய்

அன்பு தந்தாய்

அம்மாவென

முதல் வார்த்தை

சொல்லவைத்தாய்

இத்தனையும்

தந்தத் தாயே

நீ தானே

நானறிந்த

முதல் தெய்வம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக