ஆழ்கடல் நீர் குடித்து
வான்வெளியில்
மறைத்து வைத்து
மாசுபட்டு
கருத்த மேகமாய்
திரண்டு நிக்க
ஊதக்காற்றும் உசுப்பிவிட
மண்ணுக்கு வந்த
இந்த மானங்கெட்ட மழை
அடுத்தவன் மனைவியென
அறிந்தும்
வாசக்கூட்டும் வள்ளியின்
சேலையை இழுத்து
கட்டிபிடித்து கொஞ்ச
வியர்த்து விறுவிறுத்துத்
தடுமாறித்தான் போனாள்
பாவம் இந்த வள்ளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக