முளை விட்டு எழுந்து
முகம் காட்டி சிரித்த தளிர்
ஒடிந்து விழுந்ததுபோல்
முடிந்து போனாயே
என் செல்லத்தங்கமே!
வரம் வாங்கி வந்து
உன்னை பெற்றெடுத்தேனே
வாரி அனைத்திடவே -மனம்
ஏங்கித் தவிக்குதடி
என் செல்லத்தங்கமே!
ஐயா,உன்ன குளிப்பாட்ட
ஆயா ஒருத்தி ஐனூரு கேட்டு
உன் பிஞ்சு உயிரை பறித்தாளே
பெத்தவள தவிக்கவிட்டு போனாயே
என் செல்லத்தங்கமே!
கடைசி பயணம் போக- நீ
உறங்கிக்கிடக்கையில
நானல்லோ குளிப்பாட்டி
வழியனுப்பி
அழுது புலம்புறேனே
என் செல்லத்தங்கமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக