வானம் பார்த்த பூமி-என்றும்
பூமி பார்க்கும் வானம்
கள்ளங்கபடமற்ற
இரண்டையும்போல
ஊர் சனங்கள்
புள்ள குட்டி இல்லாம
கை புடிச்ச மவராசன்-என்னைக்குக்
கை விட்டு போனாரோ
அன்னைக்கே தொடங்கிடுச்சு
தண்ணீரோட கஷ்டம்
ஒரு குடம் தண்ணீர
நாலு மைலு நடந்து-நாளும்
கொண்டுவரும்
பாட்டியின் வயது
அறுபத்தேழு
"நம்ம ஊருக்கும்
தண்ணீ பைப்பு போடறாவோ
இனிமேல நாலு மைலு
நடந்துபோய்
தண்ணீர் எடுக்கவேண்டாம்னு"
சொல்லி சொல்லி
பெருமைப்பட்ட பாட்டி
செத்து நாலுபேர்
தூக்கி போனபோதும்
குளிக்காமதான் போனாவோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக