திங்கள், 11 நவம்பர், 2013

ஒரு குடம் தண்ணீர்


ானம் பார்த்த பூமி-என்றும்

பூமி பார்க்கும் வானம்

கள்ளங்கபடமற்ற

இரண்டையும்போல

ஊர் சனங்கள்

 

புள்ள குட்டி இல்லாம

கை புடிச்ச மவராசன்-என்னைக்குக்

கை விட்டு போனாரோ

அன்னைக்கே தொடங்கிடுச்சு

தண்ணீரோட கஷ்டம்

 

ஒரு குடம் தண்ணீர

நாலு மைலு நடந்து-நாளும்

கொண்டுவரும்

பாட்டியின் வயது

அறுபத்தேழு

 

"நம்ம ஊருக்கும்

தண்ணீ பைப்பு போடறாவோ

இனிமேல நாலு மைலு

நடந்துபோய்

தண்ணீர் எடுக்கவேண்டாம்னு"

 

சொல்லி சொல்லி

பெருமைப்பட்ட பாட்டி

செத்து நாலுபேர்

தூக்கி போனபோதும்

குளிக்காமதான் போனாவோ.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக