வியாழன், 14 நவம்பர், 2013

அவனுக்கேது கவலை!


தான் தேய்ந்து

மனம் பரப்பும்

சந்தனமாய்

ஒருவகை

 

உணவின் அளவு

பால் தரும்

பசுவைப் போல்

ஒருவகை

 

உணவிட்டும்- தானாக

இறகு தராத

மயிலைப் போல்

ஒருவகை

 

தொல்லை தந்து

மகிழும்

தேளைப் போல்

ஒருவகை

 

வாழும் மாந்தரை

நான்கு

வகையாய்ப்

பிரித்தாலும்

 

எங்கு தேடியும்

இவ்வையகத்தில்

நல்லவன் ஒருவனைக்

காட்டமுடியுமோ?

 

ஆக்கல்

காத்தல்

அழித்தல்- என

அத்தனையும்

 

இறைவனின்

பொறுப்பென

நம்பியவர்களுக்கு

நல்லவனைக் காட்டாமல்

 

மௌனமாய்

ஆலயங்களில்

வீற்றிருக்கும்

அவனுக்கேது கவலை!

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக