தான் தேய்ந்து
மனம் பரப்பும்
சந்தனமாய்
ஒருவகை
உணவின் அளவு
பால் தரும்
பசுவைப் போல்
ஒருவகை
உணவிட்டும்- தானாக
இறகு தராத
மயிலைப் போல்
ஒருவகை
தொல்லை தந்து
மகிழும்
தேளைப் போல்
ஒருவகை
வாழும் மாந்தரை
நான்கு
வகையாய்ப்
பிரித்தாலும்
எங்கு தேடியும்
இவ்வையகத்தில்
நல்லவன் ஒருவனைக்
காட்டமுடியுமோ?
ஆக்கல்
காத்தல்
அழித்தல்- என
அத்தனையும்
இறைவனின்
பொறுப்பென
நம்பியவர்களுக்கு
நல்லவனைக் காட்டாமல்
மௌனமாய்
ஆலயங்களில்
வீற்றிருக்கும்
அவனுக்கேது கவலை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக