பிட்டுக்கு மண் சுமக்க
ஒப்புவித்து
பணியேதும் செய்யாது
பிரம்படிபட்ட
சொக்க நாதனையும்
பால் தயிர் திருடித்
தின்று
ஆயர்குலப் பெண்ணிடம்
அடிவாங்கிய
பெருமாளையும்
காட்டு நரிகளை
பரிகளாக்கி
பாண்டியனுக்குக் கொடுத்து
வஞ்சித்த
சிவபெருமானையும்
நீராடும் பெண்களின்
ஆடைகளை
வாரியெடுத்து
ஓடிய
பரந்தாமனையும்
ஆயிரம் குற்றங்கள்
இறைவன் புரிந்தாலும்
குறை காணாத
மக்கள் மனம்-அதை
ஏற்றுக்கொள்ளும்போதும்
பாரத மக்கள்
இருவரில் ஒருவர்
இலஞ்சம் வாங்குவது
தவறென்று
உணராதபோதும்
பதவியில் உள்ளவர்கள்
பலகோடி ஊழலில்
உழல்வதைக்
குற்றமென்று
எப்படி சொல்ல?
மஹாபாரதக் காலத்தில்
நூற்றுக்கு ஐவராவது.
நல்லவர் வாழ்ந்தனர்.
இன்றோ
அதுவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக