வியாழன், 14 நவம்பர், 2013

தாஜ்மஹால்


காதல் நெஞ்சின் காவியமா-இல்லை

கண்ணில் வடித்த ஓவியமா?

 

அன்பு காதலியின் கல்லறையா-இல்லை

வாடும் நெஞ்சின் கருவறையா?

 

மறைந்த மும்தாஜின் அரங்கமா-இல்லை

ஆன்மா நினைவுறும் அந்தரங்கமா?

 

வடித்த கண்ணீரின் சின்னமா-இல்லை

வடித்தெடுத்த அழகு சீதனமா?

 

உறங்கும் மும்தாஜின் பள்ளியறையா-இல்லை

ஓடும் யமுனையின் கலங்கரை விளக்கா?

 

காதல் நினைவின் அருங்காட்சியா-இல்லை

புனிதக் காதலுக்கு ஒரு சாட்சியா?

 

பார்த்து பார்த்து எழுப்பிய சித்திரமா-இல்லை

மக்கள் பார்த்து இரசிக்கும் விசித்திரமா?

 

பிரிந்ததில் விளைந்த இராக தீபமா-இல்லை

விளந்ததில் முளைத்த ஆலாபனையா?

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக