நாளும் மாறும் நாகரீக உலகில்
பழமையான மண்சட்டிகள்
மறைந்து போனாலும்
மீண்டும் தலை காட்டும்
ஆண்களின் வசீகர இளமையை
பறைசாற்றும்
சட்டி கவிழ்த்து வெட்டியதுபோல்
தோற்றமளிக்கும் முடிவெட்டில்
பெண்களின் நாகரீகமோ
இடையில் கட்டிய புடவையோ
இடம் பெயர்ந்து
இடுப்புக்கு இறங்கியதில்
உடன்படாத பண்பாடால்
நெற்றியில் வீற்றிருந்த பொட்டு
நெகிழ்வுற்று இறங்கி
புருவங்களுக்கிடையில் வந்தமர்ந்து
இளைத்துத்தான் போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக