மூலவன் முகத்தை
மூடி மறைக்கும்
முகில் கூட்டம்
அசையா மரங்களை
உசுப்பிவிடும்
பெருங்காற்று
கலங்காதவனையும்
பதுங்கவைக்கும்
இடி முழக்கம்
வாரிகட்டுன
வானத்தின் தலைமுடியை
அவிழ்த்துவிட
நீளக் கருங்கூந்தல்
நிலம் தொட்டு
வளம் சேர்த்தது
ஆற்று நீர் ஓட
நீர்மட்டம் உயர
நாற்றுகள் நிமிர்ந்தன
பசியும் பட்டினியும்
இனி பறந்தோடுமென
எண்ணிய வேளையில்
குடும்பத்து உயிர்களை
குடி உண்பதால்
வறுமை இல்லை இனி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக