வியாழன், 5 மார்ச், 2015

நெஞ்சம் கலங்குதம்மா.

மானுடத்தின் தொட்டிலே
மொழிகளின் தாய்வீடே
தத்துவம் தழைத்தத் திருநாடே
பண்பும், அன்பும் நிறைந்து
பார்போற்ற வாழ்ந்தவளே
உன்னைப்போல் ஒரு அன்னையுண்டோ!

செய்தியறிந்தபோதே
செயலிழந்து போனேனம்மா
பெற்றவள் இறந்ததுபோல்
பாவியாய் நின்றேனம்மா
பாரதத்தாயே-உந்தன்
பெருமையை நீ இழக்கலாமோ?

உயிர்களைக் கொல்வது
பாவமென உபதேசித்த
பல்லாயிரம் சமணத்துறவிகளைக்
கழுவிலேற்றிக் கொன்றது
தாயே, உன் மடியில் தானே!-உனக்கு
பாவமென்று தோன்றலையோ?

உயிர்கள் சிந்திய உதிரத்தால்
உன்னோட களங்கத்தைக்
கழுவி மறைத்தாயோ!
வலியின் வேதனையால்
துடித்து பிரிந்த உயிர்களை-நாளும்
நினைத்து நெஞ்சம் கலங்குதம்மா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக