திங்கள், 7 நவம்பர், 2016

சமுதாய சீர்கேடல்லவா?


வாசல் வழிவந்து
வீட்டுக்குள் நுழையும்,
சுவற்றில் நடந்து
சுற்றித் திரியும் பல்லி
வாக்கு சொல்லும்—அதனால்
வெறுப்பதில்லை யாரும்

புறவழி புகுந்து
பொருள் தேடும்
திருடனைப்போல்
இருளில் அலையும் கரப்பான்
நோய் பரப்புமென்பதால்—மக்கள்
நெருங்க விடுவதில்லை

கடவுள் படைத்ததோ—இல்லை
காலம் மாற்றியதோ!
பல்லி, கரப்பானை
பிடித்துத் தின்னாது,
கரப்பான் பூச்சியும்
பல்லியை பிடிக்காது

உருவம் பெரியவை
வலிமை கொண்டவை
அஞ்சாமை உடைய யானை—நீர்
அருந்த வரும்போது
அஞ்சுவதுபோல் புலிகள்
அந்த இடம் விட்டு அகலும்

பதுங்கி, பாயும்
புலியின் உருமலில்
வெளியேறும் யானைகள்
வலிமை இருந்தும்—மோதலை
விரும்பாமல்
விலகிச் செல்லும்

அதுபோலத்தான்
அதிக வலிமையுள்ள இருவர்
எதிர்,எதிரா பகைவர்போல்
மோதிக் கொள்வதில்லை,
விட்டுக் கொடுப்பதுபோல்
விலகிச் சென்றிடுவர்

வலிமையுள்ளவனின்
வாய் தூண்டுதலால்—சாதாரணத்
தொண்டர்கள்
தங்களுக்குள்
சண்டையிட்டு சாவது
சமுதாய சீர்கேடல்லவா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக