ஞாயிறு, 15 ஜனவரி, 2017

சீரழிந்ததோ!


இடித்த வானம்
தொடுத்த பானம்
கொடுத்த உயிர்
எடுத்த காற்றும், மழையும்
தெய்வங்களாகிப்போன
இயற்கையை நாளும்
துதித்து வழிபட்டான்—அன்றைய
ஆதி மனிதன்

காலம் மாறியது
காலமுழுதும் நல்லது செய்யும்
தெய்வத்தைக் காண—மனம்
தேடி அலைந்ததில்
உண்மை அன்பும்
உயர் பண்பும் நிறைந்த
நல்ல மனிதனை கடவுளாக்கி
நெஞ்சை நிறைய வைத்தான்

கடவுளான மனிதன்
கருணை வடிவமானான்
வறுமை வாட்டிய போதும்
வேற்றுமை பார்க்காமல்
வாழும் மக்கள் அனைவருக்கும்
உணவு தந்து பசிபோக்கி
வாழ நல்வழி காட்டினான்
மக்கள் தெய்வங்களானார்கள்

ஆயிரமாயிரம் தெயங்கள்
அவதரித்த இப்பூமியில்
இன்றைய பொழுதில்
கேடு நினைக்காத நல்ல மனிதனைக்
கடவுளால் காட்டமுடியுமா?
சமயங்களும், தெய்வங்களும்
சந்தைக்கு வந்ததாலே

சந்ததிகள் சீரழிந்ததோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக