சனி, 21 ஜனவரி, 2017

ஆதரவு .

அந்நிய மண்ணுக்குஆசை பட்டு
ஆளவந்த வெள்ளையர்கள்
எடுபுடி வேலைக்கு ஆட்கள் சேர்க்க
ஆங்கிலக் கல்வி முறையை
அரங்கேற்றம் செய்தார்கள்

பணியாளர்களை உருவாக்க
பள்ளி, கல்லூரிகள் தோன்றின
அறிவு தந்த கல்வி மாறி
அடிமையானது பணத்துக்கு,
பாரத கல்வி முறை பலியானது

எந்த முறைக் கல்வியிலும்
எல்லோரும் மேதைகள் ஆவதில்லை,
உங்கள் கல்வி முறை
ஊதியம் தராதபோது—வெள்ளையர்கள்
உதறிவிட சொன்னார்கள்

ஊதியம் தந்து உயிரைக் காத்ததால்
ஆங்கிலமுறைக் கல்வியை
அங்கீகரித்து ஏற்றுக்கொண்டோம்
வேறு வழியின்றி,
விடுபட்டது இந்தியக் கல்விமுறை  

கடன் வாங்கி படித்த ஏழைகள்
கடனைத் திருப்பி தர முடியாம
வேலையும் கிடைக்காம
வேதனைபடுவோருக்கு ஆதரவு

உதையும், சிறையும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக