சனி, 1 ஏப்ரல், 2017

வெளியில் காட்டுவதில்லையோ!


வண்டு தேடும் மலர்
வாசம் சுமந்து காத்திருப்பது
மாயவனைத் தழுவவா?—இல்லை
மங்கை மகுடம் சூடவா?

வண்ண,வண்ண உடையணிந்து
வசந்தத்தை வரவேற்று
வாழ்க்கை தேடவா?—இல்லை
வசீகரித்து மயக்கவா?

பருவத்தில் மலரும்
பூவும், பொண்ணும்
ஒன்றென சொல்வது
பொறந்த இடம்விட்டு போவதாலோ!

பெற்றோரை பிரிந்து போகும்
புதுமணப் பொண்ணுபோல—பூவே
புலம்பி நீ கலங்கலையே!
உன் நெஞ்சு கல்நெஞ்சோ!

பிடித்தவரோடு ஓடிபோக—இறைவன்
பூவுக்குக் கற்று தரவில்லையோ!
பறித்துத் தொடுத்தபின் தான்
போகுமிடம் புலப்படும் அதற்கு

அதனால் தானோ
அன்னையை விட்டு பிரிந்தாலும்—பூவு
உள்ளத்தின் வேதனையை
வெளியில் காட்டுவதில்லையோ!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக