வெள்ளி, 12 மே, 2017

நம்புமா சோதிடத்தை!

காலம் காலமாய்
காலம் தவறாமல்—சுற்றும்
கிரகங்களெல்லாம்
இயற்கை தந்ததா
இல்லை
இறைவன் படைத்ததா?

இயற்கையோ, இறைவனோ
எதுவானாலும்
பிரபஞ்சத்தில் எடையும், மாற்றமும்
உயரும்போது
கிரகங்கள் சுழலுமா?
அறியாதவரை நிம்மதி தானே!

தோன்றிய அனைத்தும்
ஒரு நாள் அழியுமென்றால்
சுற்றும் கிரகங்கள்
செயலிழந்து
அழியாதோ பிரபஞ்சம்
ஆண்டவனுக்கே வெளிச்சம்

சோதிடத்திற்கு துணை நிற்கும்
சுழல்கின்ற கிரகங்கள்
மறைக்காமல் சொல்லுமா
மண்ணில் வாழ் மாந்தரின்
முடிவு நாள் எப்போதென்று?—சொன்னால்

மானுடம் நம்புமா சோதிடத்தை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக