வெள்ளி, 12 மே, 2017

போராத காலமோ!

சோற்றுக்கே வழியின்றி—தவிக்கும்
சனங்களுக்கு
சாக்கடை ஒரு கேடாயென
சரி செய்யாமல் விட்டார்களோ!

நாளும் குடித்துவிட்டு
நடுரோட்டில் வீழ்ந்து கிடப்பவனுக்கு
நல்லது, கெட்டது அறிய
நேரமேது என எண்ணினார்களோ!

பஞ்சப்பரம்பரைகளிடம்
பணங்காசு இருக்காதுன்னு
பாழும் மனசு நினைச்சதாலே
பார்க்காமல் போனார்களோ!

ஏதும் அறியா
இளம் பள்ளிக் குழந்தையொன்று
பாடம் படிக்க
பள்ளிக்கு போகையிலே

மனிதக் கழிவு சுமக்கும்
மூடாதத் தொட்டி ஒன்றில் வீழ்ந்து
உயிரைக் கொடுத்து
எடுத்து சொல்கிறதோ
நமது சுகாதார அவலத்தை!

நேர்மையைத் தொலைத்து
நெறி தவறி நடக்கும் சிலரால்
பொதுவாழ்க்கைக்கு
போராத காலமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக