வெள்ளி, 26 மே, 2017

உறுதுணயாகும்


கருவில் சுமந்தத் தாயின் அன்பு
கண் மூடும் வரை நெஞ்சில் நிலைத்திருக்கும்,
வெளியில் தெரியாத தந்தை அன்பை
உள்ளம் உணரும் நாம் தந்தையான பின்

உன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய
அன்னை தான், விழாமல் பாதுகாத்ததும்,
உலகை உனக்கு அறிமுகப்படுத்திய தந்தையோ
விழுந்தாலும் எழுவதற்குக் கற்று கொடுத்தவர்

உனக்கு வாழ்வு தந்தது அன்னை
முதலில் நடக்கக் கற்று தந்ததும் அவளே,
வாழ்க்கை பயணத்துக்கு வழிகாட்டி
வாழக் கற்று கொடுத்தவர் தந்தை

உனது பசிபோக்கி, உயிர் காத்த அன்னை
உயிர்களை நேசிக்கக் கற்பித்ததும் அவளே,
மனிதநேயத்தை கடைப்பிடிக்க சொன்ன தந்தை
மகனுக்கு பசி என்னவென்று புரியவைப்பவரும் அவரே

அநுபவம் வழி கற்பிப்பவள் அன்னை
அவளின் அன்பும், பண்பும் பிள்ளையிடம் சேரும்,
பிள்ளை அநுபவத்திலிருந்து கற்றிட உபதேசிக்கும்
தந்தையின் உண்மை, நிலைத்தன்மை பிள்ளைக்கு

உறுதுணையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக