இயற்கை அன்னை
ஈன்றெடுத்த சிசுவே—உன்னை
பெற்றவளே இருளில்
போட்டு சென்றாளோ!
புல்லின் மடியில்
படுத்து உறங்கிய நீ
பொழுது விடிந்ததும்
பயந்து நடுங்குவதேன்?
ஆதவன் அறிந்தால்
அழித்து விடுவானென
உள்ளம் துடிக்கிறதோ?
உனக்கென்ன தெரியும்
தரணி காக்கும் இயற்கையன்னை
தவறுஏதும் செய்தாளோ?
பாவம் ஒரு பக்கம்
பழி ஒரு பக்கமோ!
பழகிய உன்னை நினைத்து
பசும்புல் சோகத்தால்
கலங்கி நின்னு
கண்ணிர் வடிக்கிறதோ
இயற்கை படைத்த
ஈசலூக்குக் கூட
வாழ்நாள் ஒரு நாளாம்
உனக்கோ அதுகூட இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக