கர்ணனை வஞ்சித்த
கிருஷ்ண பகவானைப்போல
தாவரங்களை படைத்த
இயற்கை அன்னை
அதனிடமே தா வரமென்று கேட்டு
தாவரமென்று பெயரிட்டதாம்
தாவரம்
தானத்தின் திரு உரு
உயிர் காக்கும், தாகம் தணிக்கும்
உணவாகும், மருந்தாகும்
வீட்டுக்கு தூணாகும்
இறைவனாகவும் உருமாறும்
நிழல் தரும்—பறவைக்கு
வீடாகும்,மழையை
வரவழைக்கும்,
உரமாகும்,
இறக்கும் மனிதரை
எரிக்கவும் உதவும்
தந்த வரத்தால்
தான் தியாகம் புரிய
தாவரம் உறுதி பூண்டதை
தவறாக புரிந்த மக்கள்
அநுதினமும் அதனை வெட்டி
ஆதாயம் தேடுகிறார்களோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக