கன்னியாகுமரியில்
கன்னி பெண்ணாட்டம்
கால் பதித்த
பருவ மழைகூட
பூப்படைந்ததோ!
ஓகி புயலோடு சேர்ந்து
ஊரெல்லாம் சுத்தி
ஓடி விளயாடி
மனம் மகிழ்ந்த
மழை வெள்ளம்
வயசு பொண்ணாட்டம்
வீட்டுக்குள் நுழைந்து
வார்த்தை ஏதும் பேசாம
அடக்க ஒடுக்கமா
அமைதியா அமர்ந்திருக்க
ஊரு சனம் என்னவோ
வீடுகளை விட்டு
வீதியில வந்து நின்னது
தீட்டு என்பதாலா?—இல்லை
உணவு தட்டுபாடா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக