சனி, 23 பிப்ரவரி, 2019

அமரவைக்கும்





உருவாக்கும் சிற்பியால்
உடைபடும் கல்
கெளரவம் பார்க்காது
கோபம் ஏதும் கொள்ளாது
அமைதி காக்கும்
ஆண்டவனாய் உருமாறும்

கெளரவம் பார்த்தால்
காரியம் கைகூடுமா?
உடைபடாத கல் சிலையாகுமா?
உருகாத பொன் நகையாகுமா?
பிசையாத மண் பாத்திரமாகுமா?
பிச்சைக்காரனுக்கு உதவதான் முடியுமா?

வழிமறிக்கும்
வீண் கெளரவத்தை அகற்றி
நம்மை நாமே செதுக்கி
நம் திறனை சீர்படுத்தினால்
நம்மையும் இறைவனைப்போல்
நல்லுள்ளங்களில் அமரவைக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக