சனி, 11 மே, 2019

வாழ்ந்திடுவோம்




வாழ்க்கை எல்லோருக்கும்
ஒன்றுபோல அமையாது,
வாழும் மாந்தருக்குக்
கருவறை தொடங்கி
கல்லறை வரை என்பது
கடவுள் படைத்தது

தனக்கென வாழ்வது
தவறானது
பாவம் என்கிறது
பகவத்கீதை,
மற்றவரையும் தன்னைப்போல்
மதிப்பவன் தான் மனிதன்

வாழும் மக்களுக்கு
வழிகாட்டுவது
வெற்றி பெறும் அரசின்
பெரும் பொறுப்பு
வருமுன் காத்து
வறுமையை ஒழிக்க வேண்டும்

அறிவால் காத்து
அன்பால் ஒன்றுபட்டு
வாழ்க்கையை
வளமாக்குவோம்,
வாழும்போது நல்லபடியா
வாழ்ந்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக