பள்ளம் நோக்கி பாயும்
வெள்ளம் போல
உள்ளம் குதித்து மகிழும்
ஊழலில் விழுந்து கரையும்,
அறுக்கமாட்டாதவன் கையில்
அறுபது அரிவாள் என்பதுபோல
அதிகாரம் உள்ளோருக்கெல்லாம்
இறைவன் தந்த வரம்
இந்த ஊழல்
பாவம் ஏழை மக்கள்
பட்டினியால் வாடினாலும்
கப்பம் கட்டுவது
கட்டாயமாகும்—யாரும்
பாவமென்று கருதலையே!
ஓடும் நீரில் மிதந்து
போகும் சடலம் போல
போகிற போக்கில்
போவது வாழ்வா அது?
பழியா? பாவமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக