திங்கள், 15 ஏப்ரல், 2019

கடைசி வரை கைவிடாது




மேடையில் முழங்கும்
முடி சூடா வாசகங்கள்
வேலை முடிந்தது போல்
வீதியிலேயே விட்டு விலகும்

உதிரும் சொற்களெல்லாம்
உதிரத்தை உசுப்பினாலும்
உயர்த்தாதென மனம் அறியும்
உடல் வனம் புக துணியும்

மண்ணும், தாவரமும்
மனித பசிக்கு வழிகாட்டும்,
இயலாதபோதுதன்னோடு
அரவணைத்துக்கொள்ளும்

சுதந்திரம் சுவாசமாகும்காடு
சொர்க்கமாகும்
விலங்குகளும், பறவைகளும்
உற்ற உறவாகும்

காசின்றி தாகம் தணிக்கும்
காட்டு நீரெல்லாம்,
அரசியல், சாதி சாக்கடைகள்
இங்கு ஏதுமில்லை.

முற்றும் துறந்த மனதுக்கு
பற்றுமில்லை, பகையுமில்லை
நாட்டு மாந்தரைப்போல்
காட்டு விலங்குகள் வஞ்சிக்காது
கடைசி வரை கைவிடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக