வீட்டுக்கு வந்தபோது –நீ
விழுந்து கிடக்கையிலே
உள்ளம் துடிச்சுடுச்சு
உடம்பெல்லாம் வேர்த்துடுச்சு,
உள்ளூரு மருத்துவ மனையில்
உனை சேர்த்து
உறங்காம விழித்திருந்தேன்,
ஊருசனம் உறங்கையிலே
உலுக்கிய உன் நினைவு
உலகம் விழிக்கையிலே
உன்னுறக்கம் கலையலியே,
உள்ளத்தில் நிறைந்தவளே—நான்
உள்ளவரை இருக்கலையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக