திங்கள், 15 ஏப்ரல், 2019

கர்ப்பத்தின் கனிகள்





பஞ்சத்திற்கு பஞ்சமில்லா நாடு
புவியில் பாரத நாடு
பஞ்சம் தலைவிரித்தாடிய காலமது,
பதினாறு பிள்ளைகள்
பெற்ற தாய்க்கு பெரு வாழ்வு இல்லை
சாப்பிடக்கூட சட்டிகள் கிடையாது

அனைத்து பிள்ளைகளுக்கும்
அன்றாடம் கஞ்சி தான் உணவு
பதினாறு குழிபறித்து
பதினாறிலும் கஞ்சி ஊற்றுவாள்
பிள்ளைகளுக்கு போக
பெற்றவளுக்கு மீதம் இருக்காது

அப்போதெல்லாம்
அந்த பதினாறு குழிகளையும் துளாவி,
அதில் கிடைப்பதை உண்பாளாம்
அந்தத் தாய்
அவளின் கால்வயிற்றுக்குக் கூட
அது காணாது

அந்நேரங்களில்
அந்த அன்னை நினைப்பளாம்
இன்னும் இரண்டு பிள்ளைகள்
அதிகம் இருந்தால்
இன்னும் கொஞ்சம் கஞ்சி
கிடைக்குமே என ஏங்குவாளாம்

குறைவில்லாக்
குழந்தை செல்வம் கொண்டவளுக்கு
வறுமையிலும் எவ்வளவு
வளமான எண்ணம்?—இது
கர்ப்பத்தின் கனிகள், கடவுள்
கொடுத்ததெனக் கருதிய காலமது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக