சனி, 23 மார்ச், 2019

மன்னித்து அருளினார்




கோவில் வளாகத்தில்
கூடி இருக்கும் பக்தர்கள் முன்
சிவனடியார்  ஒருவர்
இறைவனின் சிறப்பு பற்றி
சொற்பொழிவு ஆற்றும்போது

நரகாசூரனைப் போல்
நாத்திகன் ஒருவன்
முட்டாள்என்று எழுதி
துண்டு காகிதமொன்றை
அடியாருக்கு அனுப்பி வைத்தான்

கிடைத்ததும் சிவனடியார்
கண நேரம் அமைதியானார்
கடிதம் பற்றி சொன்னார்
கடிதம் எழுதி விட்டு
கையெழுத்து போட

மறப்பவர்கள் மத்தியில்இவர்
கையொப்பமிட்டு
கடிதத்தை எழுதாமல்
கொடுத்து அனுப்பி இருக்கிறார்,
என்ன கவலையோ அவருக்குஎன்றார்

தவறிழைத்தவன்
தலை காட்ட முடியாமல்
தலை மறைவானான்,--அவனை
அவமானப்படுத்த மனமின்றி
அடியார் மன்னித்து அருளினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக