சனி, 27 ஜூலை, 2019

என்றும் நிலைத்திருக்கும்




இராமனுக்கு பணிந்து
சேவகம் செய்தவன் அநுமன்,
இராமனின் திருவடியின் கீழ்
இருப்பவன்
இராமனின் இதயத்தில்
இருப்பவனாகி

அனைவரையும் விட
அதிக உயரத்தில் இடம் பிடித்தது
அநுமனின்  நற்குணத்தால்
அதுபோல

மலையின் எச்சில், அருவி
மானின் கழிவு ,கஸ்த்தூரி
புனுகு பூனையின் கழிவு, சவ்வாது
மண்ணுக்குள் புரளுவது
பொன் வண்டின் எச்சில், தேன்
சிப்பி துப்பியது, முத்துஅனைத்துக்கும்
பிறக்கும் இடமும், இருக்கும் இடமும்
நிரந்தரமில்லை

இவைகளின் குணத்தாலும்,
தகுதியினாலும் தான்
மக்கள் மனதில் புகுந்து
அதிக உயரத்தில் இடம் பிடித்தன
அது என்றும் நிலைத்திருக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக