சனி, 3 ஆகஸ்ட், 2019

வீடும், நாடும் வளம்பெறும்




அடித்தளம் உறுதியாக இருந்தால்
அதன்மேல் எழும் கட்டிடமும்
தலை நிமிர்ந்து நிற்கும்அதுபோல
அடிப்படையெனும் அரசியல்
அறத்தோடு செயல்பட்டால்
அதனைச் சார்ந்த எல்லா நிர்வாக
அமைப்புகளும் முறையாக இயங்கும்

அரசியலில் படிந்த கறைகளை
அகற்றுவதில் குடி மக்கள்
அனைவரும் அக்கறை உடையவராக
இருத்தல் வேண்டும்,
எல்லோரும் எல்லாமும் பெற்று
இல்லாதோரும் ஏற்றம் கண்டு
இன்புற்று வாழ உதவிட வேண்டும்

குற்றம் புரிந்தவரை தட்டிக்
கேட்கும் மனத்துணிச்சல்
வோட்டுக்கு பணம் வாங்கி
போட்டவருக்குண்டா?
ஊழல் செய்வதில்லையென
ஒவ்வொருவரும் உறுதி கொண்டால்
வீடும், நாடும்  வளம் பெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக