சனி, 17 ஆகஸ்ட், 2019

மாற்றிக் கொள்வதில்லை





தத்துவ பேராசிரியர் ஒருவர்
தன்னை கழுதையென்று
கூறியதற்காகக்
கணித பேராசிரியர் மீது
மானநஷ்ட வழக்கு
போட்டார்

கணித பேராசிரியருக்குக்
கோர்ட்டார் அவர்கள்
அபராதம் விதித்தனர்,
அப்பொழுது கணித பேராசிரியர்
கோர்ட்டாரை பார்த்து கேட்டார்
கழுதையைப் பார்த்து
  தத்துவ பேராசிரியர் என்றால்
 அது குற்றமா? “ என்றார்

கோர்ட்டார்  அவர்கள், அது
குற்றமாகாது என்றவுடன்
கணித பேராசிரியர்
தத்துவ பேராசிரியரேநான்
போய் வருகிறேனென்று
சொல்லி புறப்பட்டார்
கோர்ட்டார் சிரித்தார்கள்,
தண்டனை பெற்றாலும்
தங்கள் கருத்தை சிலர்
மாற்றிக் கொள்வதில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக