திங்கள், 18 ஜனவரி, 2021

உயர்த்த வேண்டும்

 

சேற்றில் தோன்றும்

செந்தாமரைப் பூவின் மீது

சேறு சேருவதில்லை,

மீனும் அதே சேற்றில்

பிறந்து வாழ்ந்து

புரண்டாலும் மீனின்

உடலிலும் ஒட்டாது

அதுபோல

 

ஏழ்மையில் பிறந்து

வறுமையில் வாடினாலும்

ஏழ்மையை சுமந்தபடி

எப்போதும் வாழாமல்

 உயர் கல்வி கற்று

உயர வேண்டும் நீ--பிறரையும்

உன்னைப்போல

உயர்த்த வேண்டும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக