ஞாயிறு, 13 ஜூலை, 2014

மஞ்சள் கயிறை மணமுடிக்கும்


மண்ணில் பிறப்பெடுத்து
செந்தீயில் உருவெடுத்து
மங்கள நாளை எதிர்பார்த்து
ம‌ண‌ம‌க‌ளை அல‌ங்க‌ரித்து
ம‌ண‌மேடையேறி
ம‌ரியாதை பெற்ற‌ நீ
வ‌ச‌தியில் ம‌தி ம‌ய‌ங்கி
பொற‌ந்த‌ இட‌த்தை ம‌ற‌ந்து
உய‌ர்ந்த‌ இட‌த்தில் அம‌ர்ந்தாயோ?

இனம் இனத்தோடு சேர்வது போல்
என்றும் உன் உறவு
பணம் இருப்பவரோடு.
ஏழையை ஏங்கவைத்து
எட்டாத உயரத்தில்
எப்போதும் நீயிருந்தால்
புனிதத் தாலி கூட
மனம் மாறி விவாக‌ர‌த்தில்
ம‌ஞ்ச‌ள் க‌யிறை ம‌ண‌முடிக்கும்.

இறுமாப்பு உன‌க்கெத‌ற்கு?
ஒன்று தெரியுமா உனக்கு?
தனித்தங்கம் மலடு
உண்மை, கருத்தரிக்காது.
செம்போடு நீ சேர்ந்தால்
உன்னோடு புகழும் உயரும்
மங்காத நகையையும்
பெற்றெடுக்க‌ முடியும்

கீழிறங்கி வருவாயென‌
கீழே நின்று செம்பு
நித்தம் தவம் செய்து
எப்போதும் காத்திருக்க‌
இற‌ங்காம‌ல் நீ
பிடிவாத‌ம் செய்வ‌து
ம‌னித‌ர்க‌ளைப்போல்
வ‌ர‌த‌ட்ச‌னை வேண்டியோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக