புதன், 2 ஜூலை, 2014

வீழ்ந்ததுதான் எழுந்திடுமா?


தண்டிக்க எண்ணி

தண்ணீரில்லா காட்டுக்கு

அனுப்பி வைக்கும்

இக்காலத்தில்

 

நீர் நெறஞ்ச இடத்தில்

குடியமர்த்த வேண்டி

கோடி கோடியாய்

கொட்டித்தான் கட்டினாறோ?

 

பணத்தாசை தலைக்கேற

பாரம் தாங்காமல்

பொல பொலன்னு

இடிந்து வீழ்ந்ததுவோ?

 

உன்னோட சரிவுக்கு—ஊரு

ஒன்னொன்னா சொன்னாலும்

உள்ளம் தான் ஏற்குமா?

உடன்பிறப்பு நிற்குமா?

 

உருவாக்கிய செல்வங்கள்

உயிருக்கு தவிக்கையிலே

சேர்த்தெடுத்து செல்லாமல்

காத்தருள வேண்டாமோ?

 

வளரும் பருவத்தில்

வழிகாட்டி காக்காமல்

ஆயிரம் தான் செஞ்சாலும்

வீழ்ந்ததுதான் எழுந்திடுமா?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக