வியாழன், 19 ஜூன், 2014

அக்னி வெய்யில்


பட்டி தொட்டியெல்லாம்
தொட்டு விட்டு
கால்பதித்து கடந்துபோகும்
கோடைகாலத்துக் கொடுமை
அக்னி ந‌ட்ச‌த்திர‌ம்

இர‌வு ந‌ட்ச‌த்திர‌ம்
இத‌ய‌த்தைக் குளிரூட்டும்
அக்னி ந‌ட்ச‌த்திர‌மோ
சூரிய‌னோடு உற‌வாடி
உயிர்க‌ளைக் கொல்லும்

அன‌ல் க‌க்கும் வெய்யில்
என்றும்போல் மின்சார‌ம்
வாடும் ம‌க்க‌ளின் நிலைக‌ண்டு
க‌ண்ணீர் சிந்தும் மேக‌ங்க‌ள்,
சூரிய‌னே,ஏனிந்த‌ ஆவேச‌ம்?

த‌வ‌று செய்யாத‌ உயிர்க‌ளை
த‌ண்டிக்கும் சூரிய‌னை
வ‌ராதேயென்று எப்படிக் கூறுவேன்?
அனைத்து உயிர்க‌ளும்
அவ‌ன் த‌ய‌வில் வாழும்போது!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக