வியாழன், 12 ஜூன், 2014

கடவுளுக்கும் காசுதான் பெரிசு


காத்தருள வேண்டி
வரம் கேட்டு வந்தவரை
நல்வழிகாட்ட‍..நீ
என்றும் மறந்ததில்லை

அனைத்து செயலுக்கும்
மூலவன் நீயென‌
முதற்கண் வணங்காது
எதுவும் நடந்த‌தில்லை

செல்வ‌ங்க‌ள் குவிய‌
ம‌க்க‌ளுக்கு வ‌ழிகாட்டும்
ந‌ம்பிக்கையை ம‌ட்டும்
நீ த‌ந்த‌வ‌னில்லை

திருப்ப‌தி வெங்க‌டேச‌னும்
ப‌ழ‌னி முருக‌னும்
நாடி வ‌ரும் ப‌க்த‌ருக்கு
வாரி வ‌ழ‌ங்கி உய‌ர்ந்த‌வ‌ர்க‌ள்

அள்ளித்தந்த இறைவனெல்லாம்
அகிலம் போற்றும் தெய்வங்களாய்
செல்வ‌செழிப்போடு உய‌ர்ந்து
உச்சியில் வீற்றிருக்க‌

முத‌ல்வ‌னே! மூத்த‌வ‌னே!
விநாய‌க‌ப் பெருமானே!
உன் உறைவிட‌ம‌ட்டும்
ஏனிந்த‌ ஆற்ற‌ங்க‌ரையில்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக