வியாழன், 19 ஜூன், 2014

பொலிவுற்றாள் மண்மகள்.


இதழ் விரித்த மல்லிகையை
முத்தமிட்டு வாசம் அள்ளி
புவி மணக்க வீசும்
காலை இளந்தென்றல்

மலர்ந்தும் மலராத‌
பூவைப்போல காலைப்பொழுது
பகலவன் துயிலெழ‌
வானில் வட்டமிட்டு
பாட்டிசைக்கும் பறவையினம்

உறங்கி எழும் கதிரவனின்
ஓரவிழிப்பார்வை
பூமகளின் மேனியைத்
தொட்டுவிடுமுன்னே

நீராடி,த‌லைவாரி,பூச்சூடி
பொட்டிட்டு,அல‌ங்க‌ரித்து
புதுப்பெண்ணாய் பொலிவுற்றாள்
ம‌ண்ம‌க‌ள்-எங்க‌ள்
பாவைய‌ரின் க‌ர‌ம்ப‌ட்ட‌
கோல‌த்தால்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக