வளரும் பயிரு கருகிடுச்சே
வயலும் வரப்பும் வெடிச்சிடுச்சே
கையேந்திக் கலங்கினோமே
கல் மனசு கரையிலேயே!
மனுசனா பொறந்தாலும்
மனுசனுக்கு உதவலையே
நீட்டிப் படுக்கையிலே-நீ
என்னத்தெ எடுத்து போவே?
மேற்கும் கருக்கலையே
வடக்கும் இரங்கலையே-வேறுவழி
தெற்குக்குத் தெரியலையே
தமிழகமே இருளாச்சே!
குறை தீர்க்க வந்தவளே
கும்பிட்ட மாரியம்மா
குடி வாழ பொழிந்தாயே
கோழி மிதிச்சா, குஞ்சு சாகும்?
கொடுக்காமல் கெடுத்துடுச்சே
பக்கத்துக் கர்நாடகம்
கொடுத்துக் கெடுத்துடுச்சே
வடகிழக்குக் கார்மேகம்.
வயலும் வரப்பும் வெடிச்சிடுச்சே
கையேந்திக் கலங்கினோமே
கல் மனசு கரையிலேயே!
மனுசனா பொறந்தாலும்
மனுசனுக்கு உதவலையே
நீட்டிப் படுக்கையிலே-நீ
என்னத்தெ எடுத்து போவே?
மேற்கும் கருக்கலையே
வடக்கும் இரங்கலையே-வேறுவழி
தெற்குக்குத் தெரியலையே
தமிழகமே இருளாச்சே!
குறை தீர்க்க வந்தவளே
கும்பிட்ட மாரியம்மா
குடி வாழ பொழிந்தாயே
கோழி மிதிச்சா, குஞ்சு சாகும்?
கொடுக்காமல் கெடுத்துடுச்சே
பக்கத்துக் கர்நாடகம்
கொடுத்துக் கெடுத்துடுச்சே
வடகிழக்குக் கார்மேகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக