செவ்வாய், 3 ஜூன், 2014

நீங்காத் துயரம்


வ‌ள‌ரும் ப‌யிரு க‌ருகிடுச்சே
வ‌ய‌லும் வ‌ர‌ப்பும் வெடிச்சிடுச்சே
கையேந்திக் க‌ல‌ங்கினோமே
க‌ல் ம‌ன‌சு க‌ரையிலேயே!

ம‌னுச‌னா பொற‌ந்தாலும்
ம‌னுச‌னுக்கு உத‌வ‌லையே
நீட்டிப் ப‌டுக்கையிலே-நீ
என்ன‌த்தெ எடுத்து போவே?

மேற்கும் க‌ருக்க‌லையே
வ‌ட‌க்கும் இர‌ங்க‌லையே-வேறுவ‌ழி
தெற்குக்குத் தெரிய‌லையே
த‌மிழ‌க‌மே இருளா‌ச்சே!

குறை தீர்க்க‌ வ‌ந்த‌வ‌ளே
கும்பிட்ட‌ மாரிய‌ம்மா
குடி வாழ‌ பொழிந்தாயே
கோழி மிதிச்சா, குஞ்சு சாகும்?

கொடுக்காம‌ல் கெடுத்துடுச்சே
ப‌க்க‌த்துக் க‌ர்நாட‌க‌ம்
கொடுத்துக் கெடுத்துடுச்சே
வ‌ட‌கிழ‌க்குக் கார்மேக‌ம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக