செவ்வாய், 3 ஜூன், 2014

விடியாத‌ குடிநீர்


காலம் காலமாய்
தண்ணீருக்கு தவிக்கும்
த‌மிழ‌க‌ம்
விடியாத‌ குடிநீர்
ப‌ரித‌விக்கும் ஏழைக‌ளை
ப‌டிய‌ள‌ப்ப‌வ‌ரும்
பாராது போன‌தால்

பொன்னு விளையும்
பூமியெல்லாம் பாழ்ப‌ட்டு
ஆடை க‌லைந்து
அங்க‌ங்க‌ள் தெரிய‌
ச‌ந்தைக்கு வ‌ந்த‌து
விலைம‌க‌ளாக‌.

கல் நிறுத்தி
பட்டாபோட்டு
இறுதி மரியாதை
கல்லறையாக உருமாறுகிறது
நாளைய சமுதாயம்
உணவுக்கு
மடியப்போவதை எண்ணி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக