பறவைக் கூட்டம்
இரை தேடி பறக்கும்
காலைப் பொழுது,
வாலைப் பருவம்
வயல் தேடி போகும்
கிளிகள் இரண்டு,
மோப்பம் பிடிக்கும்
ஊர்,காவல் நாய்கள்
அவைகளின் பின்னால்,
கடித்துக் குதறி
கொம்பில் தொங்கியதில்
காலனுக்கும் பங்குண்டு,
வறண்ட ஆற்றின்
வண்டலும் வாரப்பட்டதுபோல்
வசதியற்ற கிராமம்,
ஊரும், உறவும் கூடி
அழுதாலும்—போன
உயிர் திரும்புமா?,
பாரதக் கதையை
படித்த சிலர்
கண்ணனை நினையாமல்,
அவன் கோபியரோடு
புரிந்த லீலையை
நெஞ்சில் கிடத்தியதால்,
பெண்ணின் பெருமை
போற்றும் இம்மண்ணில்—எங்கும்
பாலியல் வன்முறை,
பாரத தேசத்தில்
நாளும் கற்பழிப்பு
பாவங்கள் ஏழைகள்,
கற்பழிப்பு என்னமோ
காவல் துனையோடு
கருவாகி, உருபெற்று
நலமோடு தான் வளருது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக