வராத காவிரி
வழிதவறி வந்ததுபோல்
வெக்கைக் காலத்தில்
தார் ரோடெங்கும்
தண்ணீர் காட்சி.
வியப்புற்று
சூரியனும்
விழி விரித்து
பார்த்திட
வழியெங்கும் நீர்
நடை பயிலும் ஆறென
நெஞ்சை தொட்ட அழகு.
நாளெல்லாம்
நீருக்கு அழுத கண்கள்
அழாதிருக்கும்போது
தேகம் அழுத கோலம்
மேகம் உருபெறவோ.
மழை பொழிந்து
தமிழகத்தைக் காத்திட
மேகம் திரண்டெழ
இயற்கைகூட
மாற்றுவழி தேடிடுதோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக