கருவிலே உருவெடுத்து
காளைக் கன்றென
பிறப்பெடுத்து
கன்றிலேயே பட்ட துயர்
காலமே சொல்லி அழும்.
காளைக் கன்றின்
கால்களை இணைத்துகட்டி
கடைக்கோடி சிறு
திடலில்
கிடத்தி வைத்து,
கன்றின் விதைகளை
கிட்டியால் நசுக்கி
சிதைத்தும்,
கனலில் பழுக்க வைத்த
சூட்டுக் கோலால்
தொடையிலிருந்து
முதுகு வரை—இருபுறமும்
ஒற்றை வரிச்சூடு
போட்ட போதும்,
வலியின் வேதனையால்
வாயில்லா ஜீவன்
கதறித் துடித்ததைக்
கண்ட மனம் கலங்கி
கண்ணீரில் கரைந்ததை
எழுதாமல் போனாரோ?
எப்படியோ,
எல்லோரும்
சொல்கிறார்கள்
காளை விரட்டில்
காளையைப் பிடிப்பது
விலங்கினை
துன்புறுத்துவதாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக