செவ்வாய், 13 மே, 2014

ஒன்றுபட்டால் தவறுண்டோ?


மதங்கள் மாறிவிட்டன..

வாழவைக்க வந்த மதம்

வலுவிழந்தது.

இலாப நஷ்ட கணக்குப்

பார்த்து நலிவடைந்தது..

 

பழிபாவம் புவியெங்கும்

பலநாளும் நடக்கின்றது—அதை

தடுத்து நிறுத்தி வழிதேட

முயலாதிருக்கின்றது.

 

பாவத்தை போக்க

வந்துதித்த மதம்

பாவத்தில் மாட்டிக்கொண்டது.

வழிகாட்ட முடியாமல்

விழிபிதுங்கி நிற்கின்றது.

 

அன்று

அழியாத கல்விக்கு

ஆண்டவனை வேண்டினோம்.

வேண்டியது கிடைத்தாலும்

ஆண்டவனைக் காணவில்லை

 

இன்று

நல்லறிவும், நற்பயனும்

கூகுளில் கிடைப்பதால்

கூகுளைக் கடவுளாய்

எல்லோரும் வணங்குவோம்.

 

புவி வாழ் மக்களெல்லாம்

பயன் பெற்று சிறக்க

கூகுளை போற்றுவோம்.

ஒன்றே குலம், ஒருவனே தெய்வமென

ஒன்றுபட்டால் தவறுண்டோ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக