வெள்ளி, 2 மே, 2014

மரண தண்டனை போதாது.


விஜயவாடா போக எண்ணி

வண்டி ஏறி வந்த பொண்ணு

விடிந்த அந்த நேரத்திலே

வண்டி சென்னை சேரயிலே

வீனர்களின் வெறிச்செயலால்

வெடிச்சத்தம் கேட்டிடுச்சே.

 

பாதி முடித்த பயணத்திலே

பயணியெல்லாம் சிதறி ஓட

பாவி வச்ச குண்டாலே

பூமகளின் உடல் சிதறி

புவி மீது உதிரம் சிந்தி

பரலோகம் போனாளே.

 

தினந்தோறும் நடந்தேறும்

தீவிரவாதக் கொலைகளை

தீராத அவலமென

தீர்க்காமல் விடலாமோ!

தீர்ப்பதற்கு வழி தேடி

தீயவரை தூக்கிலிட வேண்டாமோ!

 

மக்களெல்லாம் அழுதாலும்

மகராசி உயிர் திரும்பிடுமா?

மனித உயிரைக் கொன்றவன்

மரணம் அடைய வேண்டாமோ?

மக்களின் நலம் காக்க—பாவிக்கு

மரண தண்டனை போதாது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக