செவ்வாய், 13 மே, 2014

காதல் கோட்டை


மும்தாஜுக்கு எழுப்பிய‌
தாஜ்மஹால்
ஒரு சமாதியல்ல.
மொகலாய மாமன்னனின்
உடைந்த இதயத்தை
ஒட்ட வைத்த‌
பளிங்கு மாளிகை

மனிதக் காதல்
கண்களில்பட்டு
இதயத்தில் பதிவாகும்.
ஷாஜ‌ஹானோ
இத‌ய‌த்தில் ப‌ட்ட‌தை
க‌ண்க‌ளில் ப‌திவாக்க‌க்
க‌விதையாக‌ உருவாக்கிய‌
காத‌ல் கோட்டை.

நதிக்கரை ஓரத்தில்
கம்பீரமாய் காதலுக்கு
ஒரு நினைவுச் சின்னம்.
ஓடிய‌ ய‌முனை
நின்று தேடுகிற‌து
த‌ன‌க்கு ஒரு
ஷாஜ‌கானை.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக