கோப வெறியாலே
கண்கண்ட தோழனை
கத்தியால் கொன்றுவிட
சரிக்கிய இவன் வாழ்வு
சாவுக்கே மடிவிரிக்க,
கண்ணிலே துணி கட்டி
கையிலே விலங்கு
பூட்டி
கழுத்துல கயிறு
மாட்டி
மரணத்தை எதிர்நோக்கி
உயிர் பிழைக்கக் கதறி
நிற்க,
செத்தவனின் தாயார்
நாற்காலியைத் தள்ளி
மக்களின்
முன்னிலையில்
மரணதண்டனை நிறைவேற்ற
காத்திருந்த வேளையிலே,
இளகிய தாயின் நெஞ்சம்
இமைப்பொழுதில் மனம்
மாறி
கொன்றவனை
அறைந்தபின்னே
தூக்குக் கயிறை
அவிழ்த்து
உயிர் பிச்சை
தந்திட்டாள்.
தாயாய் தான்பட்ட
கஷ்டம்
இன்னொரு தாய்க்கும்
இந்நிலை வரக்கூடாதென
மன்னித்து,
வாழ்வளித்து
தெய்வமாய்
உருவெடுத்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக