குடிநீர் இல்லாமல்
குடிசை வாழ் மக்கள்
நாளும் போராட
குடத்தோடு வீதியில்.
நதிகள் பல ஓடும்
பாரதத் திருநாட்டில்
தண்ணீர் குறைவென்றால்
நாடு நாணப்படாதோ!
காரணம் கண்டறிந்து
காலம் தாழ்த்தாமல்
நதி நீரைப்
பகிர்ந்தளிக்க
ஈர நெஞ்சம் உதவாதோ!
தன் குட்டிக்கு பால்
தரும்
தாய் யானை,
எதிர்படும்
குட்டி யானைக்கும்
பால் தருவதை
மக்கள் பார்த்துத்
திருந்தாதோ!
பெருமாளின் முதுகில்
விழுந்த அடி
மனிதர் அனைவருக்கும்
வலித்ததாம்
தமிழக மக்களின்
மனதில்
பட்ட வலி
ஒருவருக்குக்கூட வலிக்காதது
வேதனை தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக