வீதிக்கு ஒரு சாதி
சாதிக்கு ஒரு நீதி
செத்தது பாதி
கெட்டது மீதி
பசிக்கு வேட்டையாடும்
விலங்குகள்-மனிதனோ
சாதி வெறிக்கு
வெட்டி சாய்க்கும்
மிருகங்கள்.
மதங்கள்கூட
சம மதமென்று
சம்மதமாகும்போது
சாதிகள் இன்னும்
இரத்தச் சகதியில்
உழல்வதேன்?
தமிழ் மண்ணின்
விதியா?-இல்லை
அரசியல்வாதிகளின்
சதியா?
சாதிக்கு ஒரு நீதி
செத்தது பாதி
கெட்டது மீதி
பசிக்கு வேட்டையாடும்
விலங்குகள்-மனிதனோ
சாதி வெறிக்கு
வெட்டி சாய்க்கும்
மிருகங்கள்.
மதங்கள்கூட
சம மதமென்று
சம்மதமாகும்போது
சாதிகள் இன்னும்
இரத்தச் சகதியில்
உழல்வதேன்?
தமிழ் மண்ணின்
விதியா?-இல்லை
அரசியல்வாதிகளின்
சதியா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக